உள்ளூர் செய்திகள்

தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்.

நாளை கிராமசபை கூட்டம்- கலெக்டர் தகவல்

Published On 2022-08-14 10:30 GMT   |   Update On 2022-08-14 10:30 GMT
  • நாளை (திங்கள்கிழமை) சுதந்திர திருநாளன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
  • இந்த கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாளை (திங்கள்கிழமை) சுதந்திர திருநாளன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கும்.

இந்த கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.

எனவே இக்கிராம சபை கூட்டத்திற்கு தஞ்சாவூர் மாவட்டத்தின் கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பித்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News