உள்ளூர் செய்திகள்

கைதான தந்தை சந்திரகுமார், இறந்த டிக்சன்

சொத்து தகராறில் மகனை அடித்துக்கொன்ற தந்தை

Published On 2022-07-04 08:15 GMT   |   Update On 2022-07-04 08:15 GMT
  • தற்போது கோழிக்கடை வைத்து வியாபாரம் செய்து வரும் சந்திரகுமாருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
  • ஆத்திரமடைந்த சந்திரகுமார் தனது மகன் டிக்சனை அருகில் கிடந்த கட்டையை எடுத்து தாக்கியதோடு, கத்தியாலும் குத்தியுள்ளார்.

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை அருகே உள்ள மேட்டுகொல்லை கள்ளிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் டிக்சன் (வயது 29). இவரது தந்தை சந்திரகுமார் (62). தாய் நிர்மலா அரசு பள்ளி ஆசிரியை இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். டிக்சன் தனது தாய் நிர்மலாவுடன் வசித்து வந்தார்.

சந்திரகுமார் தற்போது கோழிக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகி றார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது அவருக்கு திருமணமாகி விட்டது.இந்த நிலையில் டிக்சன் தனது தந்தை சந்திரகுமாரிடம் சென்று தனது அம்மாவிற்கும், தனக்கும் எதுவும் செய்யவி ல்லை என்று கேட்டுள்ளார். இதில் தந்தைக்கும், மகனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சந்திரகுமார் தனது மகன் டிக்சனை அருகில் கிடந்த கட்டையை எடுத்து தாக்கியதோடு, கத்தியாலும் குத்தியுள்ளார்.

இதில் பலத்த காயம டைந்த டிக்சனை அருகில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி டிக்சன் இறந்தார்.

இதுபற்றி பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து சந்திரகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்திரகுமார் முன்பு சர்ச் பாதராக இருந்துள்ளார். பெற்ற மகனை தந்தையே கொன்ற இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

Tags:    

Similar News