மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
- வாரிய ஆணைய எண்.2-ஐ ரத்து செய்ய வேண்டும்.
- அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்.
தஞ்சாவூர்:
துணை மின் நிலைய ங்கள் மற்றும் சில பணிகளை அவுட்சோர்சிங் விடுவதையும் மற்றும் ரீடிப்ளாய்மெண்ட் செய்வதையும் திரும்ப பெற வேண்டும், வாரிய ஆணைய எண் 2 ஐ ரத்து செய்ய வேண்டும், அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி தஞ்சை மணிமண்டபம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இதற்கு பொறியாளர் சங்கம் சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ ராஜாராமன், தொழிலாளர் சம்மேளனம் முபாரக் பாட்ஷா, பொறியாளர் கழகம் மகாலிங்கம், அண்ணா தொழிற்சங்கம் முருகேசன், பொறியாளர் சங்கம் சுந்தர், சிஐடியு காணிக்கராஜ், ஐக்கிய சங்கம் ராகவன், எம்ப்ளாயீஸ் பெடரேசன் ராஜா, ஏ.இ.எஸ்.யு. பழனிநாதன், அம்பேத்கர் சங்கம் ஸ்டாலின், ஐஎன்டியூசி பால்ராஜ், சம்மேளனம் நாகராஜ், ஜனதா சுகுமாறன் ஆகியோர் விளக்க உரையாற்றினர்.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.