உள்ளூர் செய்திகள்

வரதட்சணை கொடுமை; கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு

Published On 2023-02-01 09:33 GMT   |   Update On 2023-02-01 09:33 GMT
  • ரூ.3 லட்சம், நகைகள் கேட்டு ஆனந்த் விஜய் மற்றும் அவரது தாய், உறவினர் ஆகியோர் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
  • 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை அருகே உள்ள குலமங்கலம் வடக்கு த்தெருவை சேர்ந்தவர் ஆனந்த் விஜய் (வயது 34).

இவரது மனைவி வான்மதி (29). இந்த நிலையில் வான்மதியிடம் ரூ.3 லட்சம், நகைகள் கேட்டு ஆனந்த் விஜய் மற்றும் அவரது தாயார் கண்ணகி, உறவினர் சின்னையன் ஆகியோர் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இது குறித்து வான்மதி ஒரத்தநாடு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் ஆனந்த் விஜய், கண்ணகி, சின்னையன் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News