உள்ளூர் செய்திகள்
தருமபுரி சிவசுப்ரமணியசாமி கோவில் உண்டியல் காணிக்கை ரூ.4 லட்சம் வசூல்
- 8 உண்டியல்களில் மொத்தம் 3 லட்சத்து 45 ஆயிரத்து 45 ரூபாய் பணமும், 23 கிராம் தங்கமும், 108 கிராம் வெள்ளியும் இருந்தது.
- கடந்த வருடம் காணிக்கை பணம் ரூபாய் 9,90,300 இருந்தது குறிப்பிடத்தக்கது.
தருமபுரி,
தருமபுரி டவுன் குமாரசாமி பேட்டை ஸ்ரீ சிவ சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உண்டியல் நேற்று எண்ணப்பட்டது.
கோயிலில் உள்ள 8 உண்டியல்களை அறநிலைய துறை உதவி கமிஷனர் உதயகுமார், செயல் அலுவலர் சபரீஸ்வரி, இன்ஸ்பெக்டர் சங்கர், மற்றும் வெங்கடாச்சலம் ஆகியோர் முன்னிலையில் உழவார பணி குழுவினர் பக்தர்கள் அளித்த காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
8 உண்டியல்களில் மொத்தம் 3 லட்சத்து 45 ஆயிரத்து 45 ரூபாய் பணமும், 23 கிராம் தங்கமும், 108 கிராம் வெள்ளியும் இருந்தது.
கடந்த 18.3.2021 அன்று இக்கோயிலில் உண்டியல் எண்ணப்பட்டபோது தங்கம் 9.500 கிராமும், வெள்ளி 114 கிராமும், காணிக்கை பணம் ரூபாய் 9,90,300 இருந்தது குறிப்பிடத்தக்கது.