உள்ளூர் செய்திகள்

(கோப்பு படம்)

சென்னை வடபழனி முருகன் கோவிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்

Published On 2022-10-04 16:43 GMT   |   Update On 2022-10-04 16:50 GMT
  • ஆளுநருக்கு கோவிலில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
  • நவராத்திரி கொலுவை ஆளுநர், குடும்பத்துடன் பார்த்து ரசித்தார்.

ஆயுதபூஜை கொண்டாட்டங்கள் தமிழகம் முழுவதும் இன்று வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றன. இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கு வருகை தந்தார். பாரம்பரிய முறையில் பட்டு வேஷ்டி அணிந்து வந்த ஆளுநருக்கு கோவிலில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. 


சிறப்பு தரிசன முறையில் சுமார் 20 நிமிடங்கள் வடபழனி முருகனை ஆளுநர் தரிசனம் செய்தார். மேலும், கோவிலில் வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலுவை குடும்பத்துடன் அவர் பார்த்து ரசித்தார். ஆளுநர் வருகையையொட்டி வடபழனி முருகன் கோவிலில், மாலை 3 மணியிலிருந்து கோபுர நுழைவாயில் வழியாக பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. கிழக்கு கோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 

Tags:    

Similar News