உள்ளூர் செய்திகள்

சிறப்பிடம் பிடித்த மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவிகளுக்கு பாராட்டு

Published On 2022-06-25 10:10 GMT   |   Update On 2022-06-25 10:10 GMT
  • பள்ளி தலைமை ஆசிரியர் நீலாதேவி தலைமை வகித்தார்.
  • இதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

பாபநாசம்:

பாபநாசம்அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பாராட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இதில் பள்ளி தலைமை ஆசிரியர் நீலாதேவி தலைமை வகித்தார். விழாவில் பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் அப்துல் கனி கலந்துகொண்டு 10-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த ஜனனி, ஹேமதர்ஷினி, ஐஸ்வர்யா ஆகியோருக்கும், 12-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த லிதனியானா, சுமனா, காவியா, லாவண்யா ஆகிய மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.இவ்விழாவில் பாபநாசம் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பேராசிரியர் செல்வராஜ், பாபநாசம் அன்னை சாரதா மகளிர் மன்ற தலைவி தில்லைநாயகி, சம்பந்தம், சமூக ஆர்வலர் பாண்டியன், உதவி தலைமை ஆசிரியர்கள் விஜய், சிவாஜி மற்றும் பலர் கலந்து கொண்டு மாணவிகளை பாராட்டி பேசினார்கள். இதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News