உள்ளூர் செய்திகள்

முத்துதேவன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார்.

தேனியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தில் மாணவர்கள் கல்வி கற்கும் முறை குறித்து ஆய்வு

Published On 2022-07-16 10:24 IST   |   Update On 2022-07-16 10:24:00 IST
  • பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகள் கல்வி கற்கும் முறையினை மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
  • எழுத்தறிவையும் எண்ணறிவையும் பெறுவது உறுதி செய்யப்படுகின்ற வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.

தேனி:

தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட முத்துதேவன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகள் கல்வி கற்கும் முறையினை மாவட்ட கலெக்டர் முரளிதரன், பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, தெரிவித்ததாவது,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான எண்ணும், எழுத்தும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 3-வகுப்பு வரை பயிலும் அனைத்துக் குழந்தைகளும் பிழையின்றிப் படிக்கவும், எழுதவும் அடிப்படைக் கணக்குகளைக் செய்யவுமான எழுத்தறிவையும் எண்ணறிவையும் மேம்படுதுகின்ற வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குழந்தைகள் கற்றலை பெறுவதற்கு உதவியாக பள்ளிக்கல்வித்துறையின் முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்பட்டு வரும் எண்ணும் எழுத்தும் திட்டம் கற்றல் நிலைக்கேற்ப கற்ப்பித்தல் என்ற அணுகுமுறையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. பாடவாரியாக உருவாக்கப்பட்டுள்ள ஆசிரியர் கையேடுகளும், பயிற்சி நூல்களும் ஒவ்வொரு குழந்தையும் தனக்கு தெரிந்த கற்றல் நிலையிலிருந்து படிப்படியாக தனது கற்றலை வளர்த்துக் கொண்டு செல்வதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, எண்ணும் எழுத்தும் திட்டத்தின் அனைத்துக் கூறுகளையும் நடைமுறைப்படுத்துவதன் மூலம் 2025-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் உள்ள 8 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் பிழையின்றிப் படிக்கவும், எழுதவும் அடிப்படைக் கணக்குகளைக் செய்யவுமான எழுத்தறிவையும் எண்ணறிவையும் பெறுவது உறுதி செய்யப்படுகின்ற வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, பள்ளியில் சுகாதாரப்பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும், மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Tags:    

Similar News