உள்ளூர் செய்திகள்

ஊர்வலம் நடத்த முயன்ற பா.ஜ.கவினரை போலீசார் தடுத்து நிறுத்திய காட்சி.

கூடலூரில் கொடி அணிவகுப்பு நடத்த முயன்ற பா.ஜ.கவினர் கைது

Published On 2022-08-09 04:38 GMT   |   Update On 2022-08-09 04:38 GMT
  • பா.ஜ.க சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
  • பா.ஜ.க நிர்வாகிகள் 26 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

கூடலூர்:

நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினவிழாவை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. ஒவ்வொரு வீடுகளிலும் வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை தேசிய கொடி ஏற்றி வைக்கவேண்டும் எனவும் கேட்டுக்ெகாள்ளப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் பா.ஜ.க சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று தேனி மாவட்டம் கூடலூர் பஸ்நிலையத்தில் இருந்து நகர இளைஞரணி பா.ஜ.க செயலாளர் சுபாஷ் தலைமையில் நிர்வாகிகள் சின்னமனூர் வரை கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த முயன்றனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஏ.எஸ்.பி ஸ்ரேயாகுப்தா, கூடலூர் இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அரசியல் கட்சி சார்பில் கொடி அணிவகுப்பு நடத்த அனுமதி கிடையாது என போலீசார் தெரிவித்தனர்.

ஆனால் அதனையும் மீறி அவர்கள் ஊர்வலமாக செல்ல முயன்றனர். இதனையடுத்து பா.ஜ.க நிர்வாகிகள் 26 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News