உள்ளூர் செய்திகள்

திருடர்களால் உடைக்கப்பட்ட பொம்மிடி புனித அந்தோணியார் ஆலையத்தின் உண்டியலை படத்தில் காணலாம்.

பொம்மிடி புனித அந்தோணியார் ஆலயத்தின் உண்டியலை உடைத்து திருட முயற்சி

Published On 2022-06-26 08:46 GMT   |   Update On 2022-06-26 08:46 GMT
  • பொம்மிடி புனித அந்தோனியார் ஆலயத்தில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
  • உண்டியலை உடைத்து திருட முயன்றுள்ளனர்.

பாப்பிரெட்டிப்பட்டி,

தருமபுரி மாவட்டம் பொம்மிடி புனித அந்தோணியார் திருத்தலம் மிகவும் பிரபலமானது.

இந்த ஆலயத்தில் சில தினங்களுக்கு முன்பு வருடாந்திர பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருவிழா முடிந்து சில தினங்களே ஆன நிலையில் நேற்று ஊரிலுள்ள கிறிஸ்துவ பெருமக்கள் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் உள்ள திருத்தலங்களை சுற்றி பார்க்க புனித பயணமாக சென்றிருந்தனர். இந்த நிலையை நோட்டமிட்ட திருடர்கள் கோவிலின் பின்புறம் ஆலயத்தில் அந்தோனியார் உருவம் உள்ள பகுதியில் உண்டி யலை கடப்பாறை கம்பிகள் மூலமாகவும் உடைத்து திருட முயற்சித்துள்ளனர்.

இதில் எவ்வளவு பணம் திருடு போய் உள்ளது என்பது குறித்து ஆலய பங்கு தந்தை, ஊர் தலைவர் ரமேஷ் ஆகியோர்போலீசிடம் புகார் தெரிவித்தனர்.

இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News