உள்ளூர் செய்திகள்

கோவையில் வாலிபர் மீது தாக்குதல்

Published On 2022-06-25 10:24 GMT   |   Update On 2022-06-25 10:24 GMT
  • கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது உறவினர் ஒருவரின் 16 வயது மகன் பீடி புகைத்து கொண்டிருந்தார்.
  • 16 வயது சிறுவன் தனது நண்பருடன் சேர்ந்து ஆறுமுகத்தை கற்களால் தாக்கினார்.

கோவை:

கோவை சிட்கோ பிள்ளையார் புரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 22). இறைச்சி கடை ஊழியர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது உறவினர் ஒருவரின் 16 வயது மகன் பீடி புகைத்து கொண்டிருந்தார்.

இதனை ஆறுமுகம் கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் சம்பவத்தன்று ஆறுமுகம் வீட்டருகே நின்று இருந்தார். அப்போது அங்கு வந்த 16 வயது சிறுவன் தனது நண்பருடன் சேர்ந்து ஆறுமுகத்தை கற்களால் தாக்கினார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் இதுகுறித்து ஆறுமுகம் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போத்தனூர் போலீசார் 16 வயது சிறுவன் மற்றும் அவரது நண்பர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News