சாதி மதமற்றவர் சான்றிதழ் கோரிய விண்ணப்பதாரர்- இரண்டு வாரங்களுக்குள் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
- சாதி மதம் இல்லை என்று சான்றிதழ் கோரி அம்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம்,
- தாசில்தார் சான்றிதழ் வழங்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.
சென்னை அண்ணாநகரை சேர்ந்த ஜெகதீசன் என்பவர் தனது மகன் யுவன் மனோஜை, அம்பத்தூரில் உள்ள பள்ளியில் சேர்த்த போது, அங்குள்ள அலுவலர்கள், விண்ணப் படிவத்தில் சாதி, மதம் தொடர்பான பத்தியை நிரப்ப வலியுறுத்தினர். அவர் மறுத்ததால், அந்த சிறுவனை பள்ளியில் சேரத்துக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது
இதையடுதது தமது மகனுக்கு சாதி, மதம் இல்லை என்ற சான்றிதழ் வழங்கக் கோரி அம்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஜெகதீசன் விண்ணப்பித்திருந்தார். அவர் கோரியபடி சாதி மதம் இல்லை என்ற சான்றிதழை அம்பத்தூர் தாசில்தார் வழங்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெகதீசன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, சாதி, மதம் இல்லை என்ற சான்றிதழை வழங்குவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தாசில்தார் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து யுவன் மனோஜிற்கு சாதி, மதம் இல்லை என்ற சான்றிதழை இரண்டு வாரங்களில் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.