உள்ளூர் செய்திகள்

சூலூரில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Published On 2022-08-18 09:57 GMT   |   Update On 2022-08-18 09:57 GMT
  • சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பேரணியாக சென்றனர்.
  • பொதுமக்கள் சாலையில் ஆங்காங்கே நின்று வேடிக்கை பார்த்தனர்.

சூலூர்,

சூலூர் போலீஸ் நிலைய போலீசார் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை சூலூர் போலீஸ் நிலையத்திலிருந்து கலங்கல் சாலை வரை நடத்தினர்.

இந்த பேரணியை சூலூர் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் குமார் தலைமை தாங்கினார். சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பேரணியாக சென்றனர். இதன்மூலம் பொதுமக்களிடையே போதை பொருள் குறித்தான விழிப்புணர்வு அதிக அளவில் ஏற்படும் என தெரிவித்தனர்.

போலீசார் திடீரென ஊர்வலமாக வருவதை பார்த்த பொதுமக்கள் சாலையில் ஆங்காங்கே நின்று வேடிக்கை பார்த்தனர். 

Tags:    

Similar News