உள்ளூர் செய்திகள்

தஞ்சையில், நாளை பார்வைதிறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு சிறப்பு பள்ளியில் சேர்க்கை - கலெக்டர் தகவல்

Published On 2022-06-29 10:00 GMT   |   Update On 2022-06-29 10:00 GMT
  • பார்வைதிறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிக்கான உதவி உபகரணங்கள், கல்வி உதவித்தொகை, வாசிப்பாளர் உதவித்தொகை ஆகியவை வழங்கப்படுகிறது.
  • 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு கணினி அறிவியல் பாடப்பிரிவுகள் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுநர்களை கொண்டு பயிற்றுவிக்கப்படுகிறது.

தஞ்சாவூர்: 

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவதுதமிழ்நாடு அரசின் மாற்று திறனாளிக்கான நலத்துறையின் கீழ் இருபாலருக்குமான விடுதியுடன் கூடிய பார்வை திறன் குறையுடையோருக்கான சிறப்பு பள்ளி தஞ்சாவூர் மேம்பாலம் அருகில் இயங்கி வருகிறது.

இந்த பள்ளியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை இலவச கல்வி அளிக்கப்படுகிறது. இந்த சிறப்புப் பள்ளியில் சேரும் பார்வைத்திறன் குறைபாடு உடைய மாணவ- மாணவிகளுக்கு ஆண்கள், பெண்கள் என தனித்தனி இலவச விடுதி வசதி, சத்தான உணவு, 4 செட் விலையில்லா சீருடை, விலையில்லா பிரெய்லி பாடப்புத்தகங்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன.

மேலும் பார்வைதிறன் குறைபாடு உடைய மாற்று த்திறனாளிக்கான உதவி உபகரணங்கள், கல்வி உதவித்தொகை, வாசிப்பாளர் உதவித் தொகை ஆகியவை வழங்கப்படுகிறது.இப்பள்ளியில் நடைப்பயிற்சி, விளையாட்டு போட்டிகள், பேச்சுப் போட்டிகள், நடனம், யோகா, சிலம்பம் போன்ற கலைகள் கற்பிக்கப்படுகின்றன. மாத ந்தோறும் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு கணினி அறிவியல் பாடப் பிரிவுகள் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுநர்களை கொண்டு கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. சமச்சீர் கல்வி பாடத்திட்டம் பிரெய்லி முறையில் கற்பிக்கப்படுகிறது. மேலும் இலவசக் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறது.

எனவே தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பார்வை குறைபாடு உடைய மாணவ- மாணவிகளை தஞ்சாவூர் அரசு பார்வைத் திறன் குறையுடையோருக்கான சிறப்பு பள்ளியில் சேர்க்கை பெற சிறப்பு முகாம் நாளை (வியாழக்கிழமை) தஞ்சாவூர் மேம்பாலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பை பார்வைத்திறன் குறைபாடு உடைய மாணவ -மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News