உள்ளூர் செய்திகள்

பல்லடம் அருகே தீப்பிடித்து எரிந்த லாரி

Published On 2023-02-08 10:06 GMT   |   Update On 2023-02-08 10:06 GMT
  • விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
  • இதுகுறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

பல்லடம் :

பல்லடம் வடுகபாளையம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட சரக்கு லாரியின் பின்புறம் இருந்து திடீர் புகை வந்தது .அக்கம் பக்கம் உள்ளவர்கள் இது குறித்து பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.  இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News