உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

திண்டுக்கல் அருகே கி.பி. 9-ம் நூற்றாண்டு தமிழ் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

Published On 2022-08-09 05:20 GMT   |   Update On 2022-08-09 05:20 GMT
  • திண்டுக்கல் அருகே கி.பி. 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஏரி வெட்டிய தச்சர்களை நினைவு கூர்ந்து தமிழ் எழுத்துகளால் பொறிக்க ப்பட்ட கல்வெட்டு தமிழக தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது
  • இக்கல்வெட்டில் குறிப்பிடும் ஏரி இந்த கல்வெட்டு அருகிலேயே பாண்டிக்குளம் என்ற பெயரில் இன்றும் பாசன குளமாக இருந்து வருகிறது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே கி.பி. 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஏரி வெட்டிய தச்சர்களை நினைவு கூர்ந்து தமிழ் எழுத்துகளால் பொறிக்க ப்பட்ட கல்வெட்டு தமிழக தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் புகையிலைப் பட்டியிலிருந்து வடமதுரை செல்லும் வழியில் ராமநாத புரம் கிராமம் உள்ளது. இந்த ஊரில் உள்ள பெரிய பாதையில் கோமாறஞ்சடை யான் என்று அழைக்கப்பட்ட இரண்டாம் வரகுண பாண்டியன் கால (கி.பி. 862-885) கல்வெட்டு உள்ளது. தமிழ் எழுத்துக்க ளால் 11 வரிகளில் ஆழமாக இக் கல்வெட்டு பொறிக்க ப்பட்டுள்ளன.

கல்வெட்டின் அருகே பாண்டியரின் சின்னமாகிய மீனுடன் வில், குத்துவிளக்குகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டு ள்ளன. பொதுவாக தமிழ கத்தில் ஏரிகளை உரு வாக்கிய அரசர்கள், அதிகாரிகளின் பெயர்க ளையே கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் ஏரிகளை தோற்றுவித்த தச்சர்களின் தலைமுறையை தெரிவிக்கும் கல்வெட்டு மிக குறைவு. இந்நிலையில் ராமநாதபுரம் கல்வெட்டு தமிழக வரலாற்றில் ஏரி செய்யும் தச்சர்களை பற்றி யும், அவர்களது ஊதியம் குறித்தும் மிக முக்கிய செய்திகளை தருகிறது.

இக்கல்வெட்டு குறித்து பழனியாண்டவர் மகளிர் கல்லூரியின் வரலாற்று துறை தலைவர், பேராசிரியர் ஜெயந்திமாலா மற்றும் ஆராய்ச்சி மாணவர் கோமதி கூறுகையில், முற்கால பாண்டியர் அரசியல் வரலாற்றிலும், பொருளியல் வரலாற்றிலும் குறிப்பிட த்தக்க மிக முக்கியமான கல்வெட்டு இது. இந்த கல்வெட்டு இரண்டு முக்கியமான செய்திகளை கூறுகிறது.

முதலாவதாக இரண்டாம் வரகுண பாண்டியன், சோழ நாட்டில் கும்பகோணம் பகுதியில் உள்ள இடவை (காவிரி, கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே இருந்த இடை யாற்று மங்கலம்) என்ற ஊரின் மீது படையெடுத்து சென்று வெற்றி பெற்றதை கூறுகிறது.

இரண்டாவதாக அப்போரில் பங்குபெற்ற பராந்தக பள்ளி வேளா னான நக்கம் புள்ளன், கல்வெட்டு உள்ள பகுதியில் தனது பெயரால் புள்ளனேரி என்ற ஒரு ஏரியை தோற்று வித்து அதற்கு மடையும் அமைத்ததை கூறுகிறது.

சோழ நாட்டில் நடந்த போர்களில் முக்கிய போராக கும்பகோணம் அருகே உள்ள இடவை என்ற ஊரில் நடைபெற்று ள்ளது.

இடவை போரில் முக்கிய பங்கு வகித்த பராந்தக பள்ளி வேளானான நக்க ன்புள்ளன் என்ற அதிகாரி தனது பெயரில் அப்பகுதி யில் பாசன ஏரியை உருவாக்கி கொண்டிருக்கும் போது காலமானார். அவரது மகன் புள்ளன்நக்கன் தனது தந்தை விட்டுச்சென்ற குறைப்பணியை செய்து முடித்து வைத்துள்ளார்.

இப்பணியை செய்த காலத்தில் அங்கு வடுகன் கூற்றன் என்ற தச்சன் பணியில் ஈடுபட்டுள்ளார். ஏரியை உருவாக்கும் வேலை நடந்து கொண்டிருக்கு ம்போது அந்த தச்சனும் இறந்து விட்டதால், அவரது மற்றொரு மகனான தச்சன் ஊதியம் பெற்று இந்த ஏரி பணியை முடித்து வைத்தார்.

இதற்கு காணியாக பள்ளி நாட்டின் இரண்டு பகுதி களிலும் உள்ள ஊர் குளங்களில் இருந்து தலை நீர் பாயும் நிலம் தச்சனுக்கு வழங்கப்பட்டது என கல்வெட்டு தெரிவிக்கிறது.

இக்கல்வெட்டில் குறிப்பிடும் ஏரி இந்த கல்வெட்டு அருகிலேயே பாண்டிக்குளம் என்ற பெயரில் இன்றும் பாசன குளமாக இருந்து வருகிறது. இக்கல்வெட்டு தற்போது தமிழக தொல்லி யல் துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படடு வருகிறது.

இவ்வாறு கூறினர்.

Tags:    

Similar News