உள்ளூர் செய்திகள்
தமிழகத்தில் இன்று புதிதாக 775 பேருக்கு கொரோனா
- கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை.
- கொரோனா சிகிச்சைக்கு 394 பேர் அனுமதி.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் இன்று புதிதாக 775 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
கொரோ தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் இன்று 394 பேர் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். 1,067 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.