உள்ளூர் செய்திகள்

முதல்வர் ஸ்டாலின்

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 6 பேர் உயிரிழப்பு - ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

Published On 2022-10-04 20:08 GMT   |   Update On 2022-10-04 20:08 GMT
  • இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
  • கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி பலியானோர் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.

சென்னை:

தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சார்லஸ் (58). இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த பிரதீவ் ராஜ் (36), பிரவீன் ராஜ் (19), தாவீது (30), ஈசாக் (39), தெர்மஸ் (19) உள்பட 10-க்கும் மேற்பட்டோர் தஞ்சை மாவட்டம் பூண்டி மாதா பேராலயத்தில் பிரார்த்தனை செய்வதற்காக நேற்று முன்தினம் வந்தனர். பின்னர், மாதாவை தரிசனம் செய்த அவர்கள் இரவில் அங்கேயே தங்கினர்.

இதற்கிடையே, நேற்று சார்லஸ், பிரதீவ்ராஜ், பிரவீன்ராஜ் உள்பட 6 பேர் மாதா கோவில் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்தனர். திடீரென தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் அவர்கள் 6 பேரும் ஆற்றில் தத்தளித்து பின்னர் சிறிது நேரத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

தகவலறிந்த திருக்காட்டுப்பள்ளி தீயணைப்புத் துறையினர், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து தீயணைப்புத் துறையினர் ஆற்றில் குதித்து 6 பேரையும் தேடினர்.

இதில் சார்லஸ், பிரதீவ்ராஜ், பிரவீன் ராஜ் மற்றும் தாவீது ஆகிய 4 பேரை சடலமாக மீட்டனர். இந்நிலையில் இன்று காலை தெர்மஸ் என்பவரை சடலமாக மீட்கப்பட்டார். 5 பேர் மீட்கப்பட்ட நிலையில் தற்போது ஈசாக் என்பவரும் சடலமாக மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட 6 பேரின் உடலும் திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், கொள்ளிடம் ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். மேலும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News