உள்ளூர் செய்திகள்

மீன்பிடி படகு

மேலும் 5 தமிழக மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்

Published On 2022-07-04 20:16 GMT   |   Update On 2022-07-04 20:16 GMT
  • இலங்கை கடற்படையால் நாகப்பட்டினம் மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராமேசுவரம்:

நாகப்பட்டினம் பகுதியில் இருந்து ஒரு விசைப்படகில் 5 மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் படகு மற்றும் அதில் இருந்த 5 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர். அதன்பின் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, காரைக்காலில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மறுநாளே நாகை மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக மீனவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News