உள்ளூர் செய்திகள்
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

கலைஞரின் சிலையை பார்க்கும்போது நெஞ்சம் உருகிவிட்டது - அமைச்சர் துரைமுருகன்

Published On 2022-05-28 13:10 GMT   |   Update On 2022-05-28 13:36 GMT
ரூ. 1.7 கோடி மதிப்பில் 12 அடி பீடத்தில், 16 அடிக்கு மு. கருணாநிதி சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டுள்ளது.

₨1.7 கோடி மதிப்பில் 12 அடி பீடத்தில், 16 அடிக்கு மு. கருணாநிதி சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

கலைஞரின் சிலையை பார்க்கும்போது நெஞ்சம் உருகிவிட்டது.

நம்முடன் கலைஞர் நேரில் பேசுவது போல் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

முடியாததை முடித்துக் காட்டுபவர் கலைஞருக்கு நிகர் கலைஞர்தான். ஸ்டாலினுக்கு நிகர் ஸ்டாலின்தான்.

எங்களைப் போல் வேட்டி கட்டும் வெங்கையா நாயுடு எங்கள் ஊர்க்காரர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. ஓமந்தூரார் தோட்டத்தில் கருணாநிதி சிலை- துணை ஜனாதிபதி இன்று மாலை திறந்து வைக்கிறார்
Tags:    

Similar News