உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2022-05-26 09:35 GMT   |   Update On 2022-05-26 09:35 GMT
அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை:

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 19-ந்தேதி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சோதனையில் முதலில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நேற்று முன்தினம் 3 மாணவர்களுக்கும், நேற்று 3 மாணவர்களுக்கும் தொற்று உறுதியானது. இதனால் நேற்று வரை 9 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்று மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருக்கிறது. இதையடுத்து அவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலேயே தனிமையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News