உள்ளூர் செய்திகள்
தென்னங்கன்று நடப்பட்ட காட்சி.

கடையம் பெரும்பத்து ஊராட்சியில் பயனாளிகளுக்கு மரக்கன்றுகள்

Published On 2022-05-24 10:07 GMT   |   Update On 2022-05-24 10:07 GMT
கடையம் பெரும்பத்து ஊராட்சியில் பயனாளிகளுக்கு மரக்கன்றுகளை ஊராட்சி மன்ற தலைவர் பொன்சீலா வழங்கினார்.
கடையம்:

கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமங்களில் காணொலிக் காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் வேளாண் திட்டங்களை தொடங்கி வைத்தார். 

தென்காசி மாவட்டம் கடையம் பெரும்பத்து ஊராட்சியில் நடைபெற்ற விழாவுக்கு ஊராட்சி தலைவர் பொன்ஷீலா பரமசிவன் தலைமை தாங்கினார்.

விழாவில் பயனாளி–களுக்கு தென்னை மரக்கன்று–கள். வீடுகளுக்கு தேவையான காய்கறி விதைகள்,விவசாய உபயோகத்திற்கான தெளிப்பான்கள், பழ மரக்கன்றுகள், உளுந்து விதை, வேளாண் இடுபொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டது.  

வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சல் பொன் ராணி, வேளாண் பொருட்களை பயனாளி களுக்கு வழங்கினர்.நிகழ்ச்சியில் அட்மா சேர்மன் குணசீலன், வேளாண்மை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி,கடையம் ஒன்றிய துணை சேர்மன் மகேஷ்மாயவன், கடையம் பெரும்பத்து தி.மு.க. நிர்வாகி பரமசிவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

முடிவில் ஊராட்சி செயலர் ஆனைமணி நன்றி கூறினார்.
Tags:    

Similar News