உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பாவூர்சத்திரம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை

Published On 2022-05-22 08:58 GMT   |   Update On 2022-05-22 08:58 GMT
பாவூர்சத்திரம் அருகே முதியவர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வீ.கே.புதூர்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாப்பேரி குலசேகரன் தெருவை சேர்ந்தவர் திருமலைபாண்டியன் (வயது 62). இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாகவும் இதனை குடும்பத்தினர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த திருமலைபாண்டியன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News