உள்ளூர் செய்திகள்
அபராதம்

பொய் வழக்கு பதிவு செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

Published On 2022-05-20 11:17 GMT   |   Update On 2022-05-20 11:17 GMT
பொய்வழக்கு பதிவு செய்த மயிலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் உள்பட 3 பேர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மக்கள் கண்காணிப்பகம் இயக்குனர் வக்கீல் ஹென்றிடிபேன் உள்ளிட்டோர் மாநில மனிதஉரிமை ஆணையத்துக்கு புகார் அளித்தனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பொம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். பழங்குடி இருளர் வகுப்பை சேர்ந்த இவரை கடந்த 14.5.2019ம் ஆண்டு மயிலம் போலீஸ் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் அப்போதைய சப்–இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் கடுமையாக தடியால் தாக்கினார்.

போலீஸ் நிலையத்தில் சித்ரவதை செய்யப்பட்ட மோகன் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். போலீசாரால் பாதிக்கப்பட்ட மோகனிடம் இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் பேராசிரியர் கல்விமணி, எழுத்தாளர் முருகன் ஆகியோர் புகார் மனு வாங்கிக்கொண்டு மயிலம் போலீஸ் நிலையம் வந்தனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் சீருடை அணியாத போலீஸ்காரர்கள் வெங்கடேசன், அறிவுநிதி ஆகிய 3 பேரும் சேர்ந்து பேராசிரியர் கல்விமணி எழுத்தாளர் முருகப்பன் ஆகியோரை கைது செய்தனர்.

எனவே இது தொடர்பாக பொய்வழக்கு பதிவு செய்த மயிலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் உள்பட 3 பேர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மக்கள் கண்காணிப்பகம் இயக்குனர் வக்கீல் ஹென்றிடிபேன் உள்ளிட்டோர் மாநில மனிதஉரிமை ஆணையத்துக்கு புகார் அளித்தனர்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி துரைசந்திரன் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டார். விசாரணை முடிந்த நிலையில் பேராசிரியர் கல்விமணி, எழுத்தாளர் முருகப்பன் ஆகிய 2 பேரை மூர்க்கதனமாக கைது செய்து பொய் வழக்கு பதிந்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தனுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஒரு மாத காலத்துக்குள் பேராசிரியர் கல்யாணி, எழுத்தாளர் முருகப்பன் ஆகிய 2 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும், இந்த தொகையினை சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தத்திடம் இருந்து வசூலிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News