உள்ளூர் செய்திகள்
நவீன முறையில் சாய்தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கல்லணை கால்வாயில் சீரமைப்பு பணிகள் தீவிரம்

Published On 2022-05-19 09:19 GMT   |   Update On 2022-05-19 09:19 GMT
கடைமடை வரை தண்ணீர் விரைந்து செல்லும் வகையில் கல்லணை கால்வாயில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பூதலூர்:

மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை காவிரி டெல்டா பாசனத்திற்காக பகிர்ந்தளிக்கும் இடமாக விளங்குவது கல்லணை. கல்லணையிலிருந்து தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களை வளப்படுத்தும் புதிய ஆறாக விளங்குவது கல்லணை கால்வாய் எனப்படும் புதுஆறு. 

கல்லணை கால்வாய் தலைப்பில் திறக்கப்படும் தண்ணீர் கடைமடைக்கு சென்று பாசனத்திற்கு பயன்படுத்துவதில் சிரமம் ஏற்படுவதாக தொடர்ந்து விவசாயிகள் குறை சொல்லிக்கொண்டே வந்தனர்.

இதனால் கல்லணைகா ல்வாயில் திறக்கப்படும் தண்ணீர் மிக விரைவில் கடைமடைக்கு சென்று சேர்ந்து குறுவை மற்றும் சம்பா சாகுபடி பணிகளை மேற் கொள்ள வசதியாக, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதி உதவியுடன் ரூ் 2639 கோடி மதிப்பீட்டில் திறன்மிக்க நீர்மேலாண்மை பணிகளை செய்ய திட்டமிட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 கல்லணை கால்வாய் தொடக்கமான கல்லணை தொடங்கி கடைமடை வரை பணிகள் செய்வதற்கு ஏற்ற வகையில் திட்டமிடப்பட்டு இப்பணிகளை 14.2.2021ல் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

தொடங்கப்பட்ட திட்டம் 16 தொகுப்புகளாக திட்டமிடப்பட்டு 1714 மதகுகள் திரும்ப கட்டுதல், 29 மதகுகள் சீரமைத்தல். 26 கால்வாய் பாலம்திரும்ப கட்டுதல், 16 கால்வாய் பாலம் சீரமைத்தல். 28 நீரொழுங்கிகள் திரும்ப கட்டுதல், புதிதாக ஒரு நீரொழுங்கிகட்டுதல். 108 கீழ்குமிழிஅமைப்பு திரும்பக் கட்டும் பணி.கல்லணை கால்வாயில் படுக்கை தளங்கள், கான்கிரீட் தளங்களாக மாற்றுதல் சாய்வு தளங்கள் கான்கிரீட் தளங்களாக அமைத்தல்.403 ஏரிகள் புனரமைப்பு பணிகள் செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கின.

கடந்த ஆண்டு தொடங்கப்பட்டபணிகள் ஜூன் 16ல் கல்லணை யிலிருந்து தண்ணீர் திறக்கப்ப ட்டதால் உடனடியாக நிறுத்தப்பட்டன.இந்த ஆண்டு ஜனவரி 28-ல் மேட்டூர் அணை மூடப்பட்ட பின்னர் பிப்ரவரி மாதத்தில் இருந்து கல்லணை கால்வா யில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 

கல்லணையில் தொடங்கி பல இடங்களில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளும் சைபன் எனப்படும் எனப்படும் கீழ்பாலங்கள் சீரமைக்கும் பணிகளும், நிறைவேற்ற ப்பட்டு வருகி ன்றன.

பல இடங்களில் கல்லணை கால்வாய் கரையில் சாய்தளம் முழுவதுமாக கான்கிரீட் நவீன எந்திரங்கள் மூலம் அமைக்கப்படும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தற்போது நடைபெற்று வரும் பணிகள் அனைத்தும் இம்மாத இறுதியில் முடித்துக் கொள்ளப் படும் வகையில் திட்டமிட்டு நடைபெற்று வருவதாக தெரிய வருகிறது.

Tags:    

Similar News