உள்ளூர் செய்திகள்
கும்பகோணம் அருகே ரெயிலில் அடிபட்டு தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நீடாமங்கலம்:
தஞ்சை மாவட்டம், நாச்சியார் கோவில் சரகம் திருவிடைமருதூர் வண்ணங்குடி கிராமத்தில் அய்யப்பன் (42) என்பவர் கடந்த 17ம் தேதி நள்ளிரவு கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறைக்கிடையே உள்ள ெரயில்வே தண்டவாளத்தை கடந்துள்ளார்.
அப்போது அவ்வழியே சென்ற ரெயிலில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த கும்பகோணம் ெரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.