உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

மணல் கடத்தியவர் கைது

Published On 2022-05-19 09:09 GMT   |   Update On 2022-05-19 09:09 GMT
நன்னிலத்தில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள முடிகொண்டான் கிராமத்தில் திருமலைராஜன் ஆற்றின் தென்கரையில், முடிகொண்டான் மேல புதுத் தெருவைச் சேர்ந்த காட்டுப்புலி என்கிற சிவானந்தம் (வயது38), தனது இரு சக்கர வாகனத்தில் சாக்குமூட்டையில் ஆற்று மணலை கடத்தினார். 

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நன்னிலம் போலீசார் சிவானந்தத்தை கைது செய்தனர்.
Tags:    

Similar News