உள்ளூர் செய்திகள்
ஓட்டேரியில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
ஓட்டேரியில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
அம்பத்தூர்:
ஓட்டேரி எஸ்.எஸ் புரம் பகுதியை சேர்ந்தவர் அருளான் ஆகாஷ் (22). போரூரில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.
இவர் சிறுமி ஒருவருடன் வீட்டில் தங்கி இருப்பதாக அக்கம்பக்கத்தினர் அயனாவரம் அனைத்து மகளிர் போலீசுக்கு தகவல் அளித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில் ஆகாஷ், 17 வயதான சிறுமியை காதலித்து வந்ததும் அவரிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்து திருமணம்செய்து தனியாக வீட்டில் வைத்து குடும்பம் நடத்தியதும் தெரிய வந்தது. மேலும் தற்போது சிறுமி 3 மாதம் கர்ப்பிணியாக உள்ளார்.
இதையடுத்து 17 வயது சிறுமியை திருமணம் செய்த அருளான் ஆகாஷ் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர். சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
ஓட்டேரி எஸ்.எஸ் புரம் பகுதியை சேர்ந்தவர் அருளான் ஆகாஷ் (22). போரூரில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.
இவர் சிறுமி ஒருவருடன் வீட்டில் தங்கி இருப்பதாக அக்கம்பக்கத்தினர் அயனாவரம் அனைத்து மகளிர் போலீசுக்கு தகவல் அளித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில் ஆகாஷ், 17 வயதான சிறுமியை காதலித்து வந்ததும் அவரிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்து திருமணம்செய்து தனியாக வீட்டில் வைத்து குடும்பம் நடத்தியதும் தெரிய வந்தது. மேலும் தற்போது சிறுமி 3 மாதம் கர்ப்பிணியாக உள்ளார்.
இதையடுத்து 17 வயது சிறுமியை திருமணம் செய்த அருளான் ஆகாஷ் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர். சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.