உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கார் மோட்டார் சைக்கிள் மோதல் - வாலிபர் பலி

Published On 2022-05-18 07:14 GMT   |   Update On 2022-05-18 07:14 GMT
அணைப்பதி அருகே காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
திருப்பூர்:

பெருமாநல்லூரை அடுத்த தட்டான்குட்டையை சேர்ந்தவர்கள் கோகுலபிரசாத் (வயது20), குமார் (25), சாரதி (27). இவர்கள் 3 பேரும் நேற்று ஒரு மோட்டார் சைக்கிளில் குன்னத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே திருப்பூர் காலேஜ் ரோட்டை சேர்ந்த சுப்ரமணி (40) என்பவர் ஒரு காரில் நம்பியூரிலிருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அணைப்பதி அருகே காரும் மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. 

இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த கோகுலபிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த குமார் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சாரதிக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News