உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

நுகர்பொருள் வாணிப கழக நெல் அரவை பணிக்கு தனியார் ஆலைகள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் அறிவிப்பு

Published On 2022-05-18 06:57 GMT   |   Update On 2022-05-18 06:57 GMT
ஆர்வமுடைய தனியார் அரவை ஆலைகள் தங்களது விருப்ப கடிதத்தை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் சேகரிப்பது முதல், அரவை செய்து கழக கிடங்குகளில் அரிசியை ஒப்படைப்பது வரை வினியோக சங்கிலி மேலாண்மை திட்டத்தில், கழகத்தில் இணையாத தனியார் அரவை ஆலைகளை முகவர்களாக ஈடுபடுத்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் முடிவு செய்துள்ளது.

ஆர்வமுடைய தனியார் அரவை ஆலைகள் தங்களது விருப்ப கடிதத்தை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு திருப்பூர் பல்லடம் ரோடு, ஒழுங்குமுறை விற்பனைகூட வளாகத்தில் உள்ள மண்டல மேலாளர் அலுவலகத்தை 9443732309 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News