உள்ளூர் செய்திகள்
கேமரா உபகரணங்கள் திருட்டுப் போன கார்.

கன்னியாகுமரியில் காரில் இருந்த ரூ.1¾ லட்சம் மதிப்புள்ள கேமரா உபகரணங்கள் திருட்டு

Published On 2022-05-17 07:23 GMT   |   Update On 2022-05-17 07:23 GMT
கன்னியாகுமரியில் பட்டப்பகலில் துணிகரம் - காரில் இருந்த ரூ.1¾ லட்சம் மதிப்புள்ள கேமரா உபகரணங்கள் திருட்டு - போலீசில் புகார்
கன்னியாகுமரி:

நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் வாத்தியார் விளை கிரஷன் தெருவை சேர்ந்தவர் ஜாண் டேவிஸ் (வயது 31). இவர் போட்டோகிராபர். இவர் சம்பவத்தன்று மாலை 5 மணி அளவில் தனது சொகுசு காரில் கன்னியாகுமரிக்கு வந்தார். 

கன்னியாகுமரி கடற்கரை சாலையில் உள்ள போக்குவரத்து புறக்காவல் நிலையம் அருகே காரை நிறுத்திவிட்டு திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் உள்ள 16 கால் மண்டபம் அருகே போட்டோ மற்றும் வீடியோ எடுத்தார்.

அதன் பிறகு மாலை 6 மணிக்கு கடற்கரை சாலையில் கார் நிறுத்தும் இடத்துக்கு சென்று தனது காரை திறக்க முயன்றார்.  அப்போது அவரது கார் கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடை ந்தார். 

காரின் பின்பக்க சீட்டில் ஒரு துணிப்பையில் சுற்றி வைத்திருந்த கேமரா உபகரணங்களை யாரோ மர்ம ஆசாமிக ள்கார்க ண்ணா டியை லாவகமாக உடைத்து திறந்து திருடிச் சென்றது தெரியவந்தது. 

அதன் மதிப்பு ரூ.1லட்ச த்து78ஆயிரம் ஆகும். இது குறித்து அவர் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அந்த காரில் திருடிய மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

சுற்றுலா பயணிகளின் நடமாட்டத்தினால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கன்னியா குமரி கடற்கரை சாலையில் பட்டப்பகலில் கார் கண்ணாடியை உடைத்து திருட்டு சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News