உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

உடுமலை அரசு கல்லூரி ஆண்டு விழா

Published On 2022-05-17 07:12 GMT   |   Update On 2022-05-17 07:12 GMT
கல்லூரி மைதானத்தில் தடகளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
உடுமலை:

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா திங்கள்கிழமை நடை பெற்றது.

கல்லூரி முதல்வர் சோ.கி.கல்யாணி தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்தார். முன்னாள் மாணவர் சங்க அறக்கட்டளை செயலர் ஆடிட்டர் ஆர்.கந்தசாமி முன்னிலை வகித்தார். பாரதியார் பல்கலைக் கழக உடற்கல்வி துறை பேராசிரியர் வள்ளிமுருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கலை இலக்கிய மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கிப் பேசினார்.

கல்லூரி மைதானத்தில் தடகளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் எம்.ஆர்.எப். பாலு, வழக்க றிஞர் பி.என்.ராஜேந்திரன், ஆடிட்டர் கண்ணன் ஆகியோர் மாணவ, மாணவிகளை வாழ்த்திப் பேசினர்.
Tags:    

Similar News