உள்ளூர் செய்திகள்
திருச்சியில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தெற்கு காட்டூர் பகுதியை சேர்ந்தவர் மைதீன்கான் வயது 33.
இவர் நத்தர்ஷா பள்ளிவாசல் பின்புறம் பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்தார்.
இது குறித்து தகவல் அறிந்தும் திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கஞ்சா விற்ற மைதீன்கானை கைது செய்தனர்.
மேலும் அவரிடமிருந்து 1.100 கிராம் கஞ்சா, 2 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.