உள்ளூர் செய்திகள்
பாபநாசத்தில் கோவிலில் பால்குட திருவிழா நடைபெற்றது.
பாபநாசம்:
பாபநாசம் செல்லியம்மன் கோவில் பால்குட திருவிழா நடைபெற்றது.
அதுசமயம் பாபநாசம் குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து செல்லியம்மனுக்கு பால்குடம் காவடி எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தது.
மதியம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, கஞ்சி வார்த்தல் மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.
மாலையில் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரமும், மாவி ளக்கு பூஜையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இவ்விழாவில் பாபநாசம் கஞ்சிமேடு கிராமமக்கள், இளைஞர்கள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.