உள்ளூர் செய்திகள்
நரசிங்க ெஜயந்தியை முன்னிட்டு நரசிங்கப் பெருமாள் நரசிங்கவல்லி தாயர்.

நரசிங்க பெருமாள் கோவிலில் பக்தர்கள் தரிசனம்

Published On 2022-05-15 11:13 GMT   |   Update On 2022-05-15 11:13 GMT
ஜெயந்தி விழாவையொட்டி நரசிங்க பெருமாள் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்
மதுரை

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள நரசிங்கம் பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு சனி மற்றும் விசேஷ நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கூடுவார்கள்.

நரசிங்க பெருமாள் ஜெயந்தி தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நரசிங்கப்பெருமாள் கோவிலில் தவக்கோலத்தில் வீற்றிருக்கும் நரசிங்கருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து உற்சவர் நரசிங்கர்- நரசிங்கவல்லி தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் இன்று கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News