உள்ளூர் செய்திகள்
.

நூல் விலை உயர்வை தடுக்க வலியுறுத்தி சேலத்தில் நாளை கடையடைப்பு

Published On 2022-05-15 10:18 GMT   |   Update On 2022-05-15 10:18 GMT
சேலத்தில் நாளை நூல் விலை உயர்வை தடுக்க வலியுறுத்தி நூல் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.
சேலம்:

சேலம் மாவட்டத்தில் ஏராளமான கைத்தறி, விசைத்தறி கூடங்கள் உள்ளன. இந்த தொழிலுக்கு மூல ஆதாரமாக திகழும் நூல் நாளுக்குநாள் விலை ஏறி வருகிறது. 

இதனால் ஜவுளி தொழில் கடுமையாக பாதிக்கபப்ட்டு உள்ளது. இதையடுத்து நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட நூல் வியாபாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

இது தொடர்பாக  சேலம் மாவட்ட நூல் வியாபாரிகள் சங்கத் தலைவர் சரவணன்  கூறியதாவது:-

நம் நாட்டில் ஒன்றுக்கு 30 லட்சம் பேல் பருத்தித் தேவை உள்ளது. அதில் 180 லட்சம் பேல் பருத்தி தமிழகத்திற்கு தேவைப்படுகிறது. ஆனால் இங்கு மிகக் குறைந்த அளவில்தான் பருத்தி கிடைக்கிறது. வெளிநாடுகளில் இருந்து ஏப்ரல், மே மாதங்களில் ஆர்டர் கிடைக்கும். 

அதை ஜனவரி, மார்ச் ஏற்றுமதி செய்வோம். இந்த ஒரு சீசனில் மட்டும் 1500 கோடி ரூபாய் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதன் மூலமாக 2 லட்சம் பேர் நேரடியாகவும் 5 லட்சம் பேர் மறைமுகமாகவும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

விலையேற்றம் செயற்கையாக உருவாக்கப் படுவதாக கருதுகிறோம். நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். அப்போது தான் நூல் உற்பத்தி சந்தைக்கு வரும். ஜவுளித் தொழில் நூல் விலை உயர்வால் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த சீசனில் விவசாயிடம் ஒரு கேண்டி 54 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியது. 

தற்போது 1 லட்சத்து 5 ஆயிரமாக உயர்ந்து விட்டது. அனைத்து ரகங்களும் ஒரு மாதத்தில் மட்டும் கிலோவுக்கு 30 ரூபாய் உயர்ந்துள்ளது. விலை தொடர்ந்து உயர்வதால் ஜவுளி சார்ந்த அனைத்து தொழில்களும் நசிந்து வருகின்றன. இதனை தடுக்க வலியுறுத்தி நாளை சேலத்தில் கடைகள் அடைத்து போராட்டம் நடத்தப்பட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News