உள்ளூர் செய்திகள்
கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை
சின்னசாமி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். முன்னதாக சின்னசாமி தனது ெசாத்துக்களை தனது 2 மகள்கள் மற்றும் மகனுக்கு பிரித்து கொடுத்து விட்டார்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த செனகல்பாளையத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி சுப்பாத்தாள் (வயது 77). சின்னசாமி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். முன்னதாக சின்னசாமி தனது சொத்துக்களை தனது 2 மகள்கள் மற்றும் மகனுக்கு பிரித்து கொடுத்து விட்டார்.
தற்போது மகன் மீதி இருக்கிற சொத்துக்களை தனது பெயருக்கு எழுதி கொடுக்குமாறு தாய் சுப்பாத்தாளிடம் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட பிரச்சினையால் மனமுடைந்த சுப்பாத்தாள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அலங்கியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் விசாரணை நடத்தி வருகிறார்.