உள்ளூர் செய்திகள்
கும்பாபிஷேகம்

ஜோதி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-05-14 10:04 GMT   |   Update On 2022-05-14 10:04 GMT
மேலூரில் ஜோதி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது
மேலூர்

மேலூர் ஜோதி நகரில் அமைந்துள்ள ஜோதி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.  

கோவில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு யாகசாலைபூஜைகள் நடந்தது. வேத ஆச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க கோவில் வாலி கருடன் வட்டமிட கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

அபிஷேகம் நடைபெற்ற பின்பு விநாயகருக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News