உள்ளூர் செய்திகள்
நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல்
நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
நெல்லை:
நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பாக கோடை வெயிலை சமாளிக்கும் விதமாக இலங்குளத்தில் உள்ள கிழக்கு ஒன்றிய தி.மு.க. அலுவலகம் அருகே உள்ள கடைவீதியில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.
நாங்குநேரி மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றிய செயலாளர்கள் சுடலைக்கண்ணு, ஆரோக்கிய எட்வின் ஆகியோர் தலைமையில் அதன் திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு மோர், பழங்கள், தண்ணீர் வழங்கப்பட்டன.
இதில் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஞானராஜ், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சேர்ம பாண்டி, செல்லதுரை, மனோகர், பாலகிருஷ்ணன், பினேகாஸ், குமார், இட்டமொழி ஒன்றிய கவுன்சிலர் பிரேமா, வின்சென்ட், ராஜக்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.