உள்ளூர் செய்திகள்
லிஃப்ட் விபத்து

தனியார் திருமண மண்டபம் லிஃப்ட் விபத்து- 3 பேர் கைது

Published On 2022-05-14 09:34 GMT   |   Update On 2022-05-14 09:34 GMT
திருவள்ளூரில் உணவு பொருட்களை எடுத்துச் செல்லும்போது லிஃப்டின் இரும்பு கயிறு அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று திடீரென லிஃப்ட் அறுந்து விழுந்தது. இதில், லிஃப்டிற்குள் இருந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர் உயிரிழந்துள்ளார். மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

உணவு பொருட்களை எடுத்துச் செல்லும்போது லிஃப்டின் இரும்பு கயிறு அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக திருமண மண்டப மேலாளர் திருநாவுக்கரசு, மேற்பார்வையாளர் வெங்கடேசன், லிஃப்ட் ஆபரேட்டர் கக்கன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்.. பக்தர்கள் வருகை அதிகரிப்பு: திருப்பதி கோவிலில் வி.ஐ.பி தரிசனம் ரத்து
Tags:    

Similar News