உள்ளூர் செய்திகள்
பரமத்தி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி பலி
பரமத்தி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி பஸ் மோதி பலியானார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே நல்லூர் அருகே உள்ள சித்தம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (65) விவசாயி. இவர் நேற்று மாலை நாமக்கல் செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் பை-பாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
பரமத்தி அருகே உள்ள காரைக்கால் பகுதியில் சென்றபோது முன்னால் சென்ற தனியார் கல்லூரி பேருந்தின் ஓட்டுனர் எந்த சிக்னலும் கொடுக்காமல் பேருந்தை இடது பக்கமாக திடீரென திரும்பி உள்ளார். அப்போது முருகேசன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளில் எதிர்பாராத விதமாக தனியார் பேருந்து மோதியது.
இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முருகேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து பரமத்தி போலீசில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தனியார் கல்லூரி பஸ் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.