உள்ளூர் செய்திகள்
ஓராண்டு சாதனை விளக்க கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்

தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

Published On 2022-05-14 09:08 GMT   |   Update On 2022-05-14 09:08 GMT
ஆயிரம் விளக்கு கிழக்கு பகுதி சார்பில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார்.

சென்னை:

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது.

தேனாம்பேட்டை, இளங்கோ சாலை, அண்ணா அறிவாலயம் அருகில் ஆயிரம் விளக்கு கிழக்கு பகுதி செயலாளர் மா.பா.அன்புதுரை தலைமையில் சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் நே.சிற்றரசு, ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன் நாகநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், துணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, தலைமைக் கழக பேச்சாளர்கள் சிங்கை பிரபாகரன், சேலம் கோவிந்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

நிகழ்ச்சியில் பகுதி செயளார்கள் ஜெ.எஸ்.அகஸ்டின்பாபு, ச.பரமசிவம், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் நுங்கை வி.எஸ்.ராஜ், பகுதி கழக நிர்வாகிகள் பி.கே.மூர்த்தி, பா.இராபர்ட், டி.வைலட் மேரி, நுங்கை இ.குமார், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ப.பிரகாஷ், வட்ட செயலாளர்கள் பூ.கா.சாமிவேல், கோ.யுவராஜ், கோ.ரவி, மு.வெங்கடேசன், எப்.பீட்டர் ஜான், ஆயிரம் விளக்கு ஆர்.பாபு, நுங்கை ப.மகேஷ், எஸ்.சத்திய பெருமாள், க.சிட்டிபாபு, ஜெ.இருதயநாதன், வரதை த.பரி, புவி.பாலாஜி உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News