உள்ளூர் செய்திகள்
தீ விபத்து

சென்னையில் உள்ள தனியார் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து

Published On 2022-05-12 16:40 GMT   |   Update On 2022-05-12 16:40 GMT
கொழுந்துவிட்டு எரியும் தீ, அருகில் உள்ள கடையிலும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை, சேலையூர் அருகே கௌரிவாக்கத்தில் உள்ள தனியார் பர்னிச்சர் மற்றும் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

கொழுந்துவிட்டு எரியும் தீ அருகில் உள்ள கடையிலும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்.. இலங்கையில் நாளை காலை முதல் ஊரடங்கில் தளர்வு
Tags:    

Similar News