உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பணகுடியில் இளம்பெண் மாயம்

Published On 2022-05-12 09:54 GMT   |   Update On 2022-05-12 09:54 GMT
பணகுடி அருகே உள்ள தண்டையர்குளம் சுபாஷ் தெருவை சேர்ந்த இளம்பெண் மாயமானார்.
நெல்லை:

பணகுடி அருகே உள்ள தண்டையர்குளம் சுபாஷ் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மகள் மந்திரா(வயது 19).

இவர் 10-ம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு அதே பகுதியில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி உள்ளார். நேற்று முன்தினம் அவரது தாத்தா கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

நேற்று காலை அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது அவரது பேத்தி மந்திராவை காணவில்லை. உடனே அவரது பெற்றோருக்கு போன் செய்து கேட்டுள்ளார். ஆனால் அவர்கள், மந்திரா இங்கு வரவில்லை என்று கூறி உள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் பணகுடி போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News