உள்ளூர் செய்திகள்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி காவல் நிலையம் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தேர்தல் அறிக்கையில் கூறியவாறு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவரக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் சாந்தி தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் பரமத்தி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டு
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.