உள்ளூர் செய்திகள்
கீழ்ப்பாக்கத்தில் மூதாட்டியை தாக்கி செயின் பறிப்பு
கீழ்ப்பாக்கத்தில் மூதாட்டியை தாக்கி செயின் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ்ப்பாக்கம் வாசு தெருவில் நீலிமா ராஜா என்ற 64 வயது மூதாட்டி இன்று காலை நடை பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் மூதாட்டியை தாக்கி 2½ பவுன் செயினை பறித்துச் சென்று விட்டனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.