உள்ளூர் செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அமைதியான மாநிலம் என்று தமிழகத்துக்கு நற்பெயர் கிடைத்துள்ளது- மு.க.ஸ்டாலின்

Published On 2022-05-10 09:48 GMT   |   Update On 2022-05-10 09:48 GMT
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியாக இருப்பதால்தான், வெளி மாநிலங்களுக்குச் சென்ற தொழிற்சாலைகள் தமிழ்நாட்டிற்கு மீண்டும் திரும்பி வந்து கொண்டிருக்கின்றது என சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் பேசியதாவது:-

இந்த ஆட்சியில் வன்முறைகள் இல்லை, சாதிச் சண்டைகள் இல்லை; மத மோதல்கள் எழவில்லை; துப்பாக்கிச் சூடுகள் இல்லை; அராஜகங்கள் இல்லை; இதுதான் இந்த ஆட்சியின் மாபெரும் சாதனை. இதுதான் உள்துறையின் மிக முக்கியமான சாதனையாக அமைந்திருக்கிறது.

தமிழ்நாட்டு மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கான அடித்தளத்தை அமைத்துத் தந்துள்ளோம். இந்த அமைதியை உருவாக்கிக் கொடுத்தது காவல்துறை.

இன்றைக்குத் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியாக இருப்பதால்தான், வெளி மாநிலங்களுக்குச் சென்ற தொழிற்சாலைகள் தமிழ்நாட்டிற்கு மீண்டும் திரும்பி வந்து கொண்டிருக்கின்றன. புதிய முதலீடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தமிழ்நாட்டை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.

இந்தியாவிலேயே அமைதியான மாநிலம் தமிழ்நாடு; பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்ற நற்பெயர் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசின் ஒரு கை, நிர்வாகம் என்றால்; இன்னொரு கை, காவல்துறை. இந்த இரண்டும் முறையாக சரியாகச் செயல்பட்டால், அந்த அரசாங்கம் தலைசிறந்த அரசாங்கமாகப் பெயர் பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News