உள்ளூர் செய்திகள்
கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்திலுள்ள பாலமுருகன், பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகன், ப

சித்திரை மாத சஷ்டியை முன்னிட்டு முருகன் கோவில்களில் வழிபாடு

Published On 2022-05-08 09:07 GMT   |   Update On 2022-05-08 09:07 GMT
பரமத்திவேலூர் பகுதிகளில் சித்திரை மாத சஷ்டியை முன்னிட்டு முருகன் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகன், பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி வடபழனி ஆண்டவருக்கு சித்திரை மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் ,பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. 

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து அருள்பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதேபோல், நன்செய் இடையாறு காவிரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத முருகன், கபிலர்மலையில் ‌பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசாமி கோவில், பரமத்தி அடுத்த பிராந்தகத்தில் 34.5 அடி உயரம் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில்‌ உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை‌ முருகன் கோவில், அனிச்சம்பாளையத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர் கோவில், நன்செய் இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள ‌சுப்ரமணியர், ராஜா சாமி கோவிலில் உள்ள ராஜா சாமி,  சுள்ளிப்பாளையம் அருகே உள்ள அருணகிரநாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர்  பாலப்பட்டியில் உள்ள முருகன் கோவில், மோகனூரில்உள்ள பாலசுப்ரமணிய சாமி கோவில் மற்றும் பரமத்திவேலூர் தாலுகாவில் உள்ள முருகன் கோவில்களில் சித்திரை மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும்,சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. 

இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News