உள்ளூர் செய்திகள்
புயல் எச்சரிக்கை கூண்டு

சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Published On 2022-05-07 13:20 GMT   |   Update On 2022-05-07 13:20 GMT
இன்று இரவு அல்லது நாளை புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இந்நிலையில், சென்னை, தூத்துக்குடி, நாகை, புதுச்சேரி, கடலூர், காரைக்கால், பாம்பன் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இன்று இரவு அல்லது நாளை புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், முக்கிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்.. ஆயுதங்களை ஏந்தி வீடுகளுக்குள் புகுந்து மக்களை மிரட்டிய 5 பேர் கைது
Tags:    

Similar News