உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஜோலார்பேட்டை பகுதியில் 2 மணி நேரம் மின்தடை மாணவர்கள் கடும் அவதி

Published On 2022-05-06 10:21 GMT   |   Update On 2022-05-06 10:21 GMT
ஜோலார்பேட்டை பகுதியில் நேற்று இரவு திடீரென 2 மணி நேரம் மின்தடை 10 ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் கடும் அவதி
ஜோலார்பேட்டை, 

தமிழக முழுவதும் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று காலை பொது தேர்வு தொடங்குகிறது. இதனால் ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று திடீரென இரவு 9 மணி அளவில் மின் தடை ஏற்பட்டது. 

அதன் பிறகு சிறிது நேரம் கழித்து  மின்சாரம் வழங்கப்பட்டு மீண்டும் மின் தடை ஏற்பட்டது. அதன் பிறகு இரவு 11 மணியளவில் மின்விநியோகம் சீரானது இதனால் இன்று 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் பொதுத்தேர்வு எழுதும் நிலையில் மிகவும் ஆர்வமாக படித்துக்கொண்டிருக்கும் போது சுமார் 2 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதன் காரணமாக பள்ளி மாணவ மாணவிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

சிலரது வீடுகளில் மெழுகுவர்த்தி, செல்போன் டார்ஜ் மற்றும் சிம்ளி விளக்கு வைத்துக்கொண்டு படித்தனர்.

 இது சம்பந்தமாக சமூக ஆர்வலர்களும் பெற்றோர்களும் பொதுமக்களும் பொதுத்தேர்வு எழுதும் நாட்களில் இரவு நேரங்களில் மின்சாரம் தங்கு தடையின்றி வழங்க மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுப்பார்களா என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

Similar News